பிரதமர் மோடியை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதார வரவேற்பு!
CM Stalin Welcome to SC Judge stand
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தையும் இந்தியவில் உள்ள அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்தை பிரதமர் நரேந்திர மோடி மனதார வரவேற்று நேற்று செய்தி வெளியிட்டு இருந்தார்.
மேலும், நாட்டின் பல்வேறு தலைவர்களும் தலைமை நீதிபதியின் இந்த கருத்தை வரவேற்று, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தலைமை நீதிபதியின் இந்த கருத்தை முழுமனதுடன் வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவரின் டிவிட்டர் பதிவில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன்.
இதனோடு, உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற நமது நீண்டநாள் கோரிக்கையையும் நிறைவேற்றுவது நீதியை நாட்டின் சாமானிய மக்களுக்கு அருகில் கொண்டு வரும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin Welcome to SC Judge stand