முதலமைச்சர் மு க ஸ்டாலினை வேதனையில் ஆழ்த்திய மரணம்.!!
cm stalin mourning for former bangalore tamil sangam president
முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் மு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவரும் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவருமான மு மீனாட்சி சுந்தரம் அவர்களது மறைவு வேதனையளிக்கிறது.
அல்சூர் ஏரிக்கரையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த 2009-ஆம் திறந்த வைத்தபோது பெங்களூர் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் அவர்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழர் ஆர்வலர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
English Summary
cm stalin mourning for former bangalore tamil sangam president