#VELLORE || வட்டி பிரச்னையில் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்! வைரலாகும் சிசிடிவி வீடியோ! - Seithipunal
Seithipunal


வேலூர் மாநகராட்சியின் 24வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர் நேற்று இரவு வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஓட்டலில் இருந்த போது 30வது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து கவுன்சிலர் சுதாகரை சரமாரியாக தாக்கியதாகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சுதாகர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திமுக கவுன்சிலர் சுதாகரின் நண்பர் சரவணன் என்பவர் மற்றொரு திமுக கவுன்சிலரான முருகனின் நண்பரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

இதற்கான வட்டித் தொகையை 4 மாதங்களாக சரவணன் செலுத்தாததால் முருகன் தரப்பினர் சரவணன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் சுதாகர், தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந்திய போது 2 கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் ஓட்டலில் இருந்த கவுன்சிலர் சுதாகரை சக திமுக கவுன்சிலர் முருகனின் ஆட்கள் தாக்கியுள்ளார். இரு திமுக கவுன்சிலர்களும் தாக்கி கொண்ட சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களின் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Clash between DMK councilors over interest issue in Vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->