கோரிக்கை மனு கொடுத்த சில மணி நேரங்களில் கூலி தொழிலாளிக்கு அரசு பணி: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி..!
Chief Minister Stalin provided a government job to a wage laborer within hours of submitting the petition
02 நாள் அரசு முறை பயணமாக வேலூர் சென்றுள்ள முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அம்மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, காட்பாடி வட்டம் சேர்க்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பொற்செல்வி என்பவர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர் ஆதரவற்ற நிலையில் வறுமை சூழ்நிலையில் வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார். குறித்த கோரிக்கை மனுவில் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தன்னுடைய மாமனார் ஒரு மாற்றுத்திறனாளி என்பதாலும் அவர்கள் அனைவரையும்,
தான் கூலி வேலை செய்து காப்பாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தனக்கு ஏதேனும் ஒரு அரசுப் பணி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பொற்செல்வியின் ஏழ்மை நிலையை கருதிய முதலமைச்சர் அவரது மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ரூபாய் 17,000 மாத சம்பளத்தில் காட்பாடி அன்னை சத்யா காப்பகத்தின் விடுதி காவலருக்கான பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.
கோரிக்கை மனு அளித்த சில மணி நேரங்களில், முதலமைச்சரிடம் இருந்து பணி நியமன ஆணை கிடைத்ததால், அதனை பெற்றுக் கொண்ட பொற்செல்வி அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார். அத்துடன், அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வணங்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் 21,776 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் அடையாளமாக 12 பேருக்கு பட்டாக்களை வழங்கியுள்ளார்.
English Summary
Chief Minister Stalin provided a government job to a wage laborer within hours of submitting the petition