செந்தில்பாலாஜிக்கு வாதாடும் நீதிபதியின் சகோதரர் வழக்கறிஞ்சரா? அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


மத்திய அமலாக்கத்துறை, கடந்த மார்ச் 6 முதல் 8 வரை டாஸ்மாக் தலைமையகத்தில் 60 மணி நேரத்திற்கும் மேலாக திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.

இதற்கு எதிராக, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், இந்த சோதனை சட்டவிரோதமானது என்பதற்கான அறிவிப்பு வழங்க வேண்டும் மற்றும் மேல்நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

முதலில், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் விசாரணை நடத்தி, வாய்மொழி உத்தரவாக அமலாக்கத்துறைக்கு மேல்நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்தனர்.

அதன்பிறகு, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இரு நீதிபதிகளும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதனால், வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு மாற்றினர்.

விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் நீதிமன்றத்தில் ஆஜராகி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் வக்கீலாக இருக்கிறார் கே.ராஜா. அவர், நீதிபதி ராஜசேகரின் இளைய சகோதரர் என்பதால், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார்.

ஆனால், நீதிபதிகள் இந்த கோரிக்கையை நிராகரித்து, வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஏப்ரல் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் முன்னிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பு மீண்டும் வழக்கு மாற்ற கோரிக்கை வைத்தனர்.

நீதிபதிகள், "சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் முறையிடலாம்" என குறிப்பிட்டு, வழக்கு மாற்ற கோரிக்கையை நிராகரித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC TASMAC Senthilbalaji case ED


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->