நரேந்திர மோடியின் "Roadshow".. இரு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக சென்னையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட வாகன பேரணி நடைபெற்றது. தியாகராய நகரில் நடைபெற்ற இந்த வாகன பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், பொன் பாலகணபதி உள்ளிட்டோர் பிரதமருடன் கலந்து கொண்டனர். 

இந்த வாகன பேரணியின் போது தேர்தல் விதிமுறைகள் மீறியதாக மாம்பழம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணிக்கு சென்னை காவல் துறையினர் 20 கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் அதனை மீறி பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணையின் போது பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case filed against Narendra Modi roadshow break election rules


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->