பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று  தமிழகம் வருகிறார்.

பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் அவர் கிருஷ்ணகிரியில் உள்ள புதிய மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். 

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஜே.பி. நட்டா திறந்து வைக்கிறார். அதன்படி, தர்மபுரி, நாமக்கல், திருச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் புதிய பாஜக அலுவலகம் திறக்கப்படுகிறது.

தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலிப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பாஜகவில் உள்ள சில நிர்வாகிகளும் விலகி அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதன் காரணமாக அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே பாஜக மற்றும் அதிமுக தலைவர்களுக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தமிழகம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்திற்கு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தல் குறித்து உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP national leader JP Natta comes to tamilnadu today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->