யாருக்கும் எரியாது; அனைவரின் மனமும் குளிரும்..!! அமைச்சர் உதயநிதிக்கு பாஜக பதிலடி..!! - Seithipunal
Seithipunal


தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிறிஸ்துவ பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழா நிகழ்ச்சி ஒன்றில் "நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். இது சங்கிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இத்தகைய கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. குறிப்பாக பாஜகவை மையப்படுத்தி அவர் இத்தகைய கருத்தை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் "நானும் ஒரு கிறிஸ்தவன் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இன்னைக்கு எல்லா சங்கிகளுக்கும் எரியும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். அவ்வாறு இல்லை, யாருக்கும் தெரியாது. அமைச்சரின் இத்தகைய கருத்தால் அனைவரின் மனமும் குளிரும். இப்படி ஒரு மதவாதி இந்துவாக இல்லையே என்பதில் மகிழ்ச்சியே" என தனது அறிக்கையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Condemns Udhayanidhi Stalins Controversial Speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->