அண்ணாமலையின் அந்த கருத்து பாஜகவின் கருத்து அல்ல - வானதி சீனிவாசன் நெத்தியடி! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் அண்ணாமலை, “2026-ம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என நான் எப்போதும் கூறமாட்டேன். அ

து பாஜக ஆட்சி என்றுதான் நான் உறுதியாக சொல்வேன். தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ளவர்கள் ஒருங்கிணைந்து எத்தனை தொகுதிகளில் யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிப்பார்கள்.

ஆனால் எனது பார்வையில், பாஜக அதிக தொகுதிகளில் நேரடியாக போட்டியிடவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார்.

மேலும், “நான் பாஜகவின் ஒரு தொண்டன். உயிர் இருக்கும் வரை இந்தக் கட்சிக்காகவே உழைப்பேன். வேறு எந்தக் கட்சிக்காகவும் என் பணி இருக்காது. கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பதும் என் கடமை. பேச வேண்டிய இடத்தில் பேசுவேன், அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், "அண்ணாமலையின் இந்தக் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் தேசிய தலைமை தான் இறுதி முடிவுகளை எடுக்கும். அந்த முடிவுகளுக்கே நாம் இணங்கி செயல்படுவோம்” என பாஜக மகளிர் அணித் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Annamalai Vanathi Srinivasan ADMK alliance


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?


செய்திகள்



Seithipunal
--> -->