கட்சி தாவும் வேலை எல்லாம் வேண்டாம்.. முன்னெச்சரிக்கையாக எச்சரித்த மோடி பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி மற்றும் எதிரணி ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் நேரடியாக மோதுகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி பீகார் சென்றார். அங்கு பாஜகவின் மாநிலத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் அவர், *“தேர்தலுக்குள் சிலர் வேறு கட்சிகளுக்குச் சென்று, முடிந்தவுடன் திரும்புவார்கள். இது உங்கள் மதிப்பையும், கட்சியில் உங்கள் நிலையும் பாதிக்கும். பொறுமை மிக முக்கியம்; அதுவே மரியாதைக்கும் அங்கீகாரத்திற்கும் வழி வகுக்கும்,”* என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி, பாஜகவின் அடித்தளக் கட்டமைப்பை வலுப்படுத்த, கடந்த தேர்தலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றியை பலமாக பிரச்சாரம் செய்யும் திட்டத்தையும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, மகா கூட்டணியிலிருந்து விலகி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த ஜேடியு தலைவர் நிதிஷ் குமார், கடந்த ஆண்டு ஜனவரியில் ஒன்பதாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார். இவரது அடிக்கடி கூட்டணி மாறும் போக்கே தற்போது தேசிய அரசியலில் பெரும் விவாதமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bihar Assembly elections 2025 Nitish Kumar Prime Minister Modi 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->