மோடியை விமர்சிக்க அச்சமா...? - ஆம் ஆத்மி கட்சி ராகவ் சத்தாவின் பதவி பறிப்பு...!
Are you afraid criticize Modi Aam Aadmi Party removes Raghav Chadha from position he has
டெல்லி மதுபான கொள்கை வழக்கை சுற்றிய அரசியல் பரபரப்பில், கடந்த 2024ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய அதிர்வை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் வெடித்தபோதும், மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா பங்கேற்காதது கட்சிக்குள் கேள்விகளை எழுப்பியது.பின்னர் பிப்ரவரி மாதத்தில் வழக்கில் இருந்து கெஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டபோதும், சத்தா அமைதியாகவே இருந்தது மேலும் கவனத்தை ஈர்த்தது.
கட்சியின் வெற்றி கொண்டாட்டங்களிலும் அவர் காணப்படாதது உள்கட்சி முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது.
இந்த பின்னணியில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகவ் சத்தா நீக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அவருக்கு பதிலாக அசோக் மிட்டல் புதிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாநிலங்களவை செயலாளருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
பதவி நீக்கத்திற்குப் பிறகு தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்த ராகவ் சத்தா, “அமைதி என்பது தோல்வி அல்ல” என மறைமுகமாக பதிலளித்தார். ஆனால் அதற்கு கட்சி தரப்பில் கடும் எதிர்வினை வெளிப்பட்டது.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் தாண்டா பதிலடி கொடுத்து, “நீங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நரேந்திர மோடிக்கு எதிராக பேச அஞ்சுகிறீர்கள்; நாட்டின் முக்கிய பிரச்சினைகளை முன்வைக்க தயங்குகிறீர்கள்” என்று கடுமையாக விமர்சித்தார்.
English Summary
Are you afraid criticize Modi Aam Aadmi Party removes Raghav Chadha from position he has