அந்த பெண்ணின் முகத்தை காட்டி அசிங்கப்படுத்தும் அறிவாலய ஏவல் நாய்கள்..! கட்சியிலிருந்து நீக்கிய உதயநிதி!
Arakonam Incident DMK ADMK
அரக்கோணத்தில் திமுக நிர்வாகியால் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை திமுகவினர் வெளியிட்டு அசிக்கப்படுத்துவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திமுக ஆட்சியில் ஒரு பெண் புகார் தைரியமாக புகார் அளித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
அந்த பெண் போலீசுக்கு கொடுத்த ஆதாரம், குற்றவாளிகளான திமுகவினருக்கே வந்து சேரும்.
திமுக ஐடி விங்க் களத்தில் இறங்கி, VICTIM SHAMING செய்யும்.
மீடியாக்கள் பொறுப்போடு பெண்ணின் முகத்தை மறைத்து வெளியிட்டாலும், இந்த அறிவாலய ஏவல் நாய்கள் அந்த பெண்ணின் முகத்தை காட்டி, அவரை அசிங்கப்படுத்தும் வேலையை செய்யும்!
போலீசுக்கு பெண் கொடுத்த ஆதாரம் திமுக ஐடி விங்க்-க்கு எப்படி வந்தது? #யார்_அந்த_DMKITWINGராகுல்?
தெய்வச்செயல் செய்த குற்றத்திற்கு இணையானது #DMKITWING செய்யும் குற்றம்! And this is not the first time!
ஆட்சி இருக்கிறது, தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான் இவர்களை இவ்வளவும் செய்ய வைக்கிறது. காலம் மாறும்; காட்சிகள் மாறும்! தண்டனைகள் உறுதியாக கிடைக்கும்!
பாதிக்கப்பட்டவரின் பக்கம் என்றைக்கும் அதிமுக ஐடி விங்க்துணைநிற்கும்" என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, திமுகவிலிருந்து தெய்வச்செயல் நீக்கப்படுவதாக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
English Summary
Arakonam Incident DMK ADMK