5 பேர் பலி! கர்நாடகத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை! பிரித்து மேயும் பெரும் மழை! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மே 20) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தர கன்னடா, உடுப்பி, தக்‌ஷிண கன்னடா, குடகு, சிவமோகா, சிக்கமகளூரு, ஹசன் ஆகிய கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதால், வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களிலும் பலத்த மழை மற்றும் சூரைக்காற்று காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பெங்களூரில் இன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை 0.4 மில்லிமீட்டர் மழை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை முதல் பெய்த கனமழையால், மாநிலம் முழுவதும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெங்களூரைச் சேர்ந்த மூவரும் உள்ளனர்.

பெங்களூருக்கு விடுக்கப்பட்ட ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை தொடரும் நிலையில், நகரில் மழை தற்போது குறைந்ததாகவும், மழை மேகங்கள் வடமேற்கே நகர்ந்து வருவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அந்த 7 மாவட்டங்களில் மக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka very very heavy Rain alert red alert


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->