அரசுக்கு வேண்டுகோள்! வியாசர்பாடி பகுதியில் தீயில் வீடுகள்... கேட்கும்போதே பதப்பதைக்கிறது...! - நயினார் நாகேந்திரன் - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் ''நயினார் நாகேந்திரன்'' தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரன்:

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"வியாசர்பாடியில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பற்றி சேதமடைந்துள்ளதாக வரும் செய்திகள் பதபதைக்கின்றன. நல்வாய்ப்பாக, உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கேள்விப்பட்டேன்.

தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் வேளையில், வீடுகளை இழந்த மக்களுக்கு தக்க அடிப்படை வசதிகளை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக பாஜக நிர்வாகிகளைக் கேட்டுக்கொள்கிறேன்"எனத் தெரிவித்துள்ளார்.

இது தற்போது இணையத்தில் வரவேற்கத்தக்க விதமாக மாறியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Appeal government Houses fire Vyasarpadi area felt bad hearing issue Nainar Nagendran


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->