சோதனைகள் எத்தனை வந்தாலும் அதிமுக நிமிர்ந்து நிற்கும்!கவலைப்பட வேண்டாம்..சிறப்பான கூட்டணி அமையும்! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி!
No matter how many trials come AIADMK will stand tall Donot worry a great alliance will be formed Edappadi Palaniswami will tell you
2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமை உற்சாகமாகத் தயாராகி வரும் நிலையில்,கூட்டணி தொடர்பான பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,“2026ல் அதிமுக தலைமையிலான சிறப்பான கூட்டணி அமையும்.யாரும் கவலைப்பட வேண்டாம், அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,”என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நெரிசலுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,எடப்பாடி பழனிசாமி தனது உரையில் அதிமுக எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்தார்.
அவர் கூறியதாவது:“இந்தியாவிலும் சரி, அதிமுகவிலும் சரி பல இயக்கங்கள் உள்ளன.ஆனால் எந்த இயக்கமும் இத்தனை சோதனைகள் சந்தித்ததில்லை.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல சிரமங்களையும் எதிர்த்து அதிமுக இன்று மக்கள் இயக்கமாக நிமிர்ந்து நிற்கிறது.”அவர் மேலும்,“பழுத்த மரத்தில் தான் கல்லடி படும்.அதுபோலவே அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
நம்மிடையே இருந்த துரோகிகளும் அதிமுகவை வீழ்த்த முயன்றார்கள்.ஆனால் அவர்கள் அனைவரையும் கடந்து தான் நாங்கள் இன்றும் வலிமையுடன் நிற்கிறோம்,”என்று கூறினார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி,“போலி வாக்குகளைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தம் அவசியமானது.ஆனால் திமுக இதை எதிர்த்து வருகிறது.ஆளுங்கட்சியினர் இந்த பணிகளில் தலையிட்டு, தங்கள் ஆதரவாளர்களுக்காகவே விண்ணப்பங்கள் அளிக்கிறார்கள்,”
என்று குற்றம்சாட்டினார்.
சமீபத்தில் தவெக அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை என சில தகவல்கள் வெளிவந்த நிலையில்,அதிமுக தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, கூட்டணியைச் சுற்றியிருந்த அந்த வதந்திகளை மறுத்து,எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறினார்:“கூட்டணி குறித்து சிலர் தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.அதிமுக தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.2026ல் அதிமுக தலைமையிலான சிறப்பான கூட்டணி நிச்சயம் உருவாகும்.அதிமுக தான் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.”
சமீபத்தில் அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் நீக்கம் மற்றும்கூட்டணியைச் சுற்றியுள்ள குழப்பம், கட்சிக்குள் சிறு அதிர்வை ஏற்படுத்தியிருந்தது.ஆனால், எடப்பாடி பழனிசாமியின் இந்த உரை,அதிமுக தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
2026 தேர்தலை நோக்கி அதிமுக தன்னம்பிக்கையுடன் நகர்கிறது.கூட்டணியைப் பற்றிய ஊகங்களுக்கும், உள் அதிருப்திக்கும் இடையே எடப்பாடி பழனிசாமியின் உறுதியான உரை,“நாம் ஒருங்கிணைந்தால் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி” என்ற நம்பிக்கையைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
English Summary
No matter how many trials come AIADMK will stand tall Donot worry a great alliance will be formed Edappadi Palaniswami will tell you