கச்சத்தீவை மீட்க இவரால் மட்டுமே முடியும்.. அண்ணாமலை பேட்டி.!! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று ராமநாதபுரம் அரண்மனையில் சமீபத்தில் உயிரிழந்த இணைய மன்னர் ராஜா குமரன் சேதுபதியின் அரண்மனைக்குச் சென்று இளைய மன்னரின் மனைவி ராணி லட்சுமி நாச்சியார், மகன் நாகேந்திர சேதுபதி ஆகியோரிடம் துக்கம் விசாரித்தார். 

அதன்பிறகு, அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, சுகாதாரத் துறையில் நடந்த முறைகேடு குறித்து அமைச்சர் உண்மை தகவல்களை மறைத்துள்ளார். கட்சதீவு ராமநாதபுரம் சமஸ்தான மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தது. 

தனது மீனவர்கள் நெடுந்தீவு வரை மீன் பிடிக்க அனுமதி வேண்டும். கச்சத்தீவில் உள்ள தேவாலயத்திற்கு விசா இல்லாமல் சென்று வரவேண்டும் ஆகியவற்றை தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. கச்சத்தீவை மீட்க பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். 

ராமேஸ்வரத்திற்கு உதான் திட்டத்தில் விமான நிலையம் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளையும் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால் திமுக அரசு அதற்கான திட்ட அறிக்கையை அனுப்புவதில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

annamalai press meet about kachchatheevu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->