#BigBreaking || ஆதரவு யாருக்கு? ஓபிஎஸ், ஈபிஎஸ்-யை திடீரென சந்தித்த அண்ணாமலை.! வெளியான பரபரப்பு தகவல்.!
annamalai meet admk heads ops eps
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில், 'உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை இப்போதே நீங்கள் அறிவிக்க வேண்டும். அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அடுத்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் சிடி ரவி அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், இந்த சந்திப்பின்போது அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்தும் விவாதம், ஆலோசனை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி சந்தித்த அண்ணாமலை, அடுத்ததாக தற்போது பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்திக்க சென்று கொண்டிருக்கிறார்.
English Summary
annamalai meet admk heads ops eps