முதலமைச்சருடன் அன்புமணி எம்பி திடீர் சந்திப்பு!
Anbumani meet TN CM Edappadi Palanisamy
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்று பேசினார். அப்போது காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
பின்னர் தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் NRC க்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என கூறியுள்ளார்.
English Summary
Anbumani meet TN CM Edappadi Palanisamy