பெரிய மாற்றம் நிகழுமா? அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆணைப்படி சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் 27.6.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும்

28.6.2025 சனிக்கிழமை காலை 10 மணியளவில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

இக்கூட்டங்களில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகள் குறித்தும் வரும் பேரவை பொதுத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும் கருத்துப் பரிமாற்றமும் ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

ஆகவே தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட நாள்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஐடி விங்க் சரியாக செயல்படவில்லை என்று அக்கட்சியினரே அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், நடக்கவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK IT wing meet EPS announce


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->