19 திமுக சட்டமன்ற உறுப்பினர் மீதான வழக்கில் திருப்பம்..! அதிரடி காட்டிய அதிமுக அரசு..! - Seithipunal
Seithipunal


2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாக அந்தப் பொருள்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தனர். இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவை உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்தனர். மேலும், புதிய உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பலாம் என்று நீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பலாம் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செப்டம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை செயலாளர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவை உரிமைக் குழு மீண்டும் 19 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ரிட் மனு தாக்கல் செய்தது. 

இத்தகைய சுழலில், பேரவையில் குட்கா பொருட்களை காண்பித்த விவகாரம் உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்த்த வழக்கில் கடந்த 24 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது செப்டம்பர் 7-ம் தேதி 19 திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை  உரிமைக் குழு  அனுப்பிய புதியஉரிமை மீறல் நோட்டீஸுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் 24 ஆம் தேதி இந்த தடை உத்திரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

இந்த நிலையில், "ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும்"
சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளது.

நோட்டீசுக்கு தடை விதித்த உத்தரவை ரத்து செய்ய கோரி சட்டமன்ற செயலாளர், உரிமைக்குழு தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு  மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk appeal 19 dmk mla case in high court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->