நீ என்னடா சொல்லுறது.. நீ தமிழ்நாட்டில் நடமாட முடியாது - திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை ஒருமையில் திட்டிய அதிமுக உதயகுமார்!
ADMK Udhayakumar warn to DMk Minister TRB Raja Keezhadi Excavation
கீழடி ஆய்வறிக்கைக்கு மேலும் அறிவியல் ஆதாரங்கள் தேவை என மத்திய அரசு தெரிவித்தது, பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, கீழடி அகழ்வாராய்ச்சியில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதும் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியது.
இந்த நிலையில், பாஜகவுக்கு *தமிழ்* என்றால் கசப்பு, *தமிழர்* என்றால் வெறுப்பு என்றுத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால், பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இதற்கெதிராக ஒரு வார்த்தை கூட பேசாததை திமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், கீழடி விவகாரத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நையாண்டி செய்து திமுக ஐடி விங் வெளியிட்ட கார்ட்டூன் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "கீழடியை பற்றி நீ என்னடா சொல்லுறது... கீழடி அகழ்வாராய்ச்சிக்கு நிதியை முதலில் ஒதுக்கியது அதிமுக ஆட்சியில்தான். அதிமுக மீது தவறான தகவல்களை பரப்புவதை பொறுக்க முடியாது. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தமிழ்நாட்டிலேயே நடமாட முடியாத நிலை ஏற்படும். மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள். கீழடி விவகாரத்தில் திமுகவுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறோம்" என எச்சரித்தார்.
English Summary
ADMK Udhayakumar warn to DMk Minister TRB Raja Keezhadi Excavation