இதை விட தூய்மைப் பணியாளர்களை இழிவுப்படுத்த வேறெதுவும் தேவையில்லை - திமுகவிற்கு அதிமுக கடும் கண்டனம்!
ADMK Raj Sathyan condemn to DMK Mk Stalin govt
அதிமுக ஐடி விங்க் தலைவர் ராஜ் சத்யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இதை விட 13 நாட்களாக போராடிய தூய்மைப் பணியாளர்களை இழிவு படுத்த வேறெதுவும் தேவையில்லை திமுக!
ஒடுக்கப்பட்டோர் மேயர் என்று தன்னை "Branding" செய்துகொண்டு, எளிய மக்களை பார்த்து பேசக் கூட மனமில்லாத ஒருவரோடும்,
"வாக்குறுதி கொடுத்தா காட்டுங்க" என்று ரவுடி போல மிரட்டல் விடுத்த அமைச்சரோடும் தூய்மைப் பணியாளர்கள் பேரணி செல்வார்களா என்ன?
தங்கள் பணிக்காக, நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்காக போராடிய மக்களின் வலியைக் கொஞ்சம் கூட புரிந்துகொள்ள முடியாமல், அவர்களை இரவோடு இரவாக காவல்துறையை ஏவிவிட்டு,
அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு,
அவர்களை அடித்து துரத்திய பிறகு,
அவர்கள் எதற்காக உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்?
பொய் வாக்குறுதி கொடுத்து அவர்களை ஏமாற்றியதற்கா?
அல்லது திமுகவின் சென்னை கிழக்கு மாவட்ட துணை அமைப்பாளர் தேன்மொழி வைத்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமைக்கா?
இல்லை காவல்துறை வைத்து "மரியாதையாக" நடத்தி மாவு கட்டு போட வைத்தமைக்கா?
அல்லது, இவ்வளவும் நடந்த போது "கூலி" படம் பார்த்து போட்டோவுக்கு சிரித்துக் கொண்டிருந்தீர்களே... அதற்கா?
எல்லாவற்றிற்கும் போட்டோஷூட் தான் தீர்வு என்று திரியும் மக்கள் விரோத திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Raj Sathyan condemn to DMK Mk Stalin govt