பொதுக்குழு தீர்மானம் | சரியான பாயிண்டை பிடித்த இபிஎஸ் தரப்பு! உச்சநீதிமன்றத்தில் நடந்த திருப்பம்!
ADMK OPS vs EPS SC Case 15122022
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கில் வருகின்ற ஜனவரி மாதம், நான்காம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், அதிமுகவின் பொதுக்குழு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமியை ஒருமனதாக தேர்ந்தெடுத்தது. மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது.
இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதேபோல எடப்பாடி பழனிச்சாமியும் கூடுதல் மனுக்களை இந்த வழக்கில் தாக்கல் செய்திருந்தார்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஓ பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு தற்போது தற்போதைய சூழ்நிலையில் பலனற்றதாக போய்விட்டது' என்று வாதிட்டார்.
மேலும், 'ஓபிஎஸ் பொதுக்குழு நடத்த தடை கூறினாரே தவிர, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக அவர் வழக்கு தாக்கல் செய்யவில்லை' என்று எடப்பாடி பழனிசாமி தடுப்பு வழக்கறிஞர் வாதத்தை முன் வைத்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்த பிறகு தொடர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தடுப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வருகின்ற ஜனவரி மாதம், நான்காம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
அதற்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை இரு தரப்பினரும் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட இரண்டு தரப்புமே, ஏற்கனவே பிறப்பித்தன் உத்தரவு படி தாக்கல் செய்து விட்டதாக தெரிவித்தனர்.
English Summary
ADMK OPS vs EPS SC Case 15122022