#Bigbreaking || அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் தடை கோரிய வழக்கில், நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கி உள்ளது. 

நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தனித்தனியாக அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னால் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

ஓ.பி,எஸ்-ஐ 'தலைமை ஏற்க வா தலைவா' என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இதேபோல் இபிஎஸ் ஆதரவாளர்களும் 'தலைமை ஏற்க வா தலைவா' என போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சூரிய மூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், நிராகரிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி மனுதாரர் சூர்யமூர்த்திக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, அவரின் (சூர்யமூர்த்தியின்) கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK OPS EPS ISSUE COURT 16 JUNE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->