அதிமுகவின் முக்கிய புள்ளிகள் கட்சியிலிருந்து நீக்கம்.. பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக நகர செயலாளர் உட்பட 7 பேர் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு அதிமுகவை சார்ந்தவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுகவினர் மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுகவின் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குமாரபாளையம் நகராட்சி தலைவர் தேர்தலில் மூன்று அதிமுக கவுன்சிலர்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து, வெற்றிபெற வைத்தனர். இதையடுத்து, நகர அதிமுக செயலாளர் நாகராஜன், கவுன்சிலர்கள் ரேவதி, பூங்கொடி, நந்தினி தேவி ஆகியோர், அதிமுக உறுப்பினராக உள்ள அவர்களது கணவர்கள் திருமூர்த்தி, வெங்கடேசன், ராஜ கணேசன் ஆகிய ஏழு பேரையும் அதிமுக தலைமை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியது. 

இதைக் கேள்விப்பட்ட அதிமுகவின் மற்றொரு அணியான முன்னாள் கவுன்சிலர் ரவி தலைமையில் பள்ளி பாளையம் பிரிவு சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk members dismissal admk happy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->