#BigBreaking || அதிமுக பொதுக்குழுவுக்கு ஆபத்து.... சற்றுமுன் தமிழக டிஜிபி.,இடம் முன்னாள் அமைச்சர்கள் புகார்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ளதாக நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்தது என்றும், பொதுக்குழுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்னதாகவே வழங்க வேண்டும் என்றும் அந்த முறையிட்ட மனுவில் ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

மேலும், இன்று காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படை சிறை பிடித்தது குறித்து தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ்க்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொது குழுவில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்க போவதில்லை என்று, ஓபிஎஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

பொதுக்குழுவில் பங்கேற்க கோரி பொருளாளர் எனக் குறிப்பிட்டு ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டிஜிபி இடம், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில். "அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். கடந்த முறை அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் பாதுகாப்பு தர காவல்துறை தவறிவிட்டது.

கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை நடக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பை தமிழக போலீஸ் வழங்க வேண்டும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். 

நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு சமூக விரோதிகளால் ஆபத்து ஏற்படலாம். எனவே போலீசார் முறையான ஒரு பாதுகாப்பை அளிக்க வேண்டும். கடந்த முறை வாகன நெரிசல் உள்ளிட்ட பல்வேறு விரும்பத் தகாத செயல்கள் அரங்கேறின. அது போல் இல்லாமல் இந்த முறை முழுமையாக பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk meet issue jeyakumar press meet ops vs eps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->