எதேச்சாதிகார மனநிலை மன்னருக்கும், அவரது மகனுக்கும் இன்னும் ஒரு வருடம்‌ தான் - ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசு தொகுப்பில் இந்தமுறை ரூ.1000 வழங்கப்படாததை கண்டித்து அதிமுகவினர் வைத்த பேனர்களை போலீசார் அகற்றியதற்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எத்தனை வழக்குகளை தொடுத்து எங்களை தடுத்து விட‌‌ முடியும்?

பொங்கல் பரிசு தொகுப்பில் ₹2500 ரூபாய் ரொக்க பரிசு இடம் பெறாததை குறிப்பிட்டு‌ பல‌ தனியார் இடங்களில்‌ வைத்த பதாகைகளை அவசரம்‌ அவசரமாக அகற்ற முயன்றுள்ளது காவல்துறை!

எந்த வகையிலும்-எந்த கேள்வியும் இந்த ஆட்சிக்கு எதிராக எழுப்ப  கூடாது என்ற எதேச்சாதிகார மனநிலை மன்னருக்கும் அவரது மகனுக்கும் உள்ளது.

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ஆட்சியில் அமர்ந்து மக்களை முட்டாளாக்கி கொண்டு இருப்பதும் எதிர்கட்சி-கூட்டணிக் கட்சி என எல்லா இயக்கங்களையும் முடக்கி கொண்டு இருப்பதெல்லாம் இன்னும் ஒரு வருடம்‌ தான்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Jayakumar Condemn to DMK Govt MK STalin Udhay


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->