தமிழக சட்டமன்ற தேர்தல்; 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 6,000 பேர் வேட்புமனு தாக்கல்..!
Approximately 6000 candidates have filed nominations to contest in the 234 constituencies across Tamil Nadu
வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் 10 நாட்கள் கழித்து மே 04-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிட சுமார் 6,000 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முதல் 03 நாட்களில் 3,430 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் கடைசிநாளில் 2,500க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 09-ஆம் தேதி கடைசிநாளாகும்; அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். இதன் காரணமாக கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
English Summary
Approximately 6000 candidates have filed nominations to contest in the 234 constituencies across Tamil Nadu