#BigBreaking || சற்றுமுன் நிறைவேறிய அதிரடி தீர்மானம்.! இனி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு..! - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை, இனி அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற சிறப்பு தீர்மானத்தை சற்று முன்பு அதிமுகவின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையின் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. 

இதில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு உள்ளனர். 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பொதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை மாற்றி, இனி அவர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என சற்று முன்பு சிறப்பு தீர்மானம் ஒன்று அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேறி உள்ளது.

சட்டவிதிகளை ஏற்றவும், திருத்தவும், நீக்கும் அதிகாரம் தொடர்ந்து பொதுக்குழுவுக்கு நீடிக்கும் என்றும் என்றும், ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் புதிய தேர்வு முறையை மாற்ற பொது குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றும் இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HEAD SELECTION RULE


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->