முக்கிய வழக்கின் விசாரணை : வெளியாக போகும் உத்தரவு!
ADMK Head Office Case Chennai HC CBCID Police Sep
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை-மோதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பிடமும், அலுவலகத்துக்கு இரண்டு முறை நேரில் சென்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்பி, ஓ.பி.எஸ். ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி, தலைமை கழக மேலாளர் மகாலிங்கம் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து உள்ளனர்.
வழக்கு தொடர்பான பல்வேறு தடயங்கள், ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் ஓபிஎஸ்-க்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் எதிராக பல்வேறு ஆதாரங்கள், சிசிடிவி காட்சிகள், வீடியோ பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அலுவலக மோதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்க உள்ளது. அப்போது, விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இன்றைய வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
ADMK Head Office Case Chennai HC CBCID Police Sep