ஸ்டாலினுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர் - அதிமுக முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் சீ.த.செல்லப்பாண்டியன், திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு வெளியிட்டார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மறைமலைநகர் பகுதியில் இன்று நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் தலைமையில் முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் சீ.த.செல்லப்பாண்டியன் பேசுகையில், பழனிசாமி தலைமையில் இருந்த அரசு வரிகளை உயர்த்தாமல் பொதுமக்கள் பாதிப்பை தவிர்த்து கையாளும் பணியில் கவனம் செலுத்தியது. ஆனால் தற்போதைய ஸ்டாலின் மாடல் அரசு சொத்து வரி, வீட்டு வரி, குழாய் வரி மற்றும் மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

திமுக அரசு மக்கள் நலனில் கவனம் காட்டாமல் உள்ளது. 2026-ல் பழனிசாமி தலைமையில் புதிய அரசு வேண்டும், அதற்கான பூத் கமிட்டியை நிர்வாகிகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக அரசு செய்த சாதனைகள் மற்றும் திமுக அரசின் அவலங்களை தெளிவாக மக்களுக்கு விளக்கி, ஸ்டாலினுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர். கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே முக்கிய இலக்காகும்.

அதிமுக ஆட்சியில் இருந்த திட்டங்கள் மீண்டும் உயிர்பெற்று செயல்படுவதாகவும், முதல்வர் ஸ்டாலின் தற்போது வெறும் புகைப்பட போட்டு இருப்பதாகவும், கட்சியினர் முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Ex Minister say 2026 election DMK loss


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->