4 பேர் பலி! அலட்சியப் போக்குடன் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசு - எடப்பாடி பழனிசுமை கடும் கண்டனம்!
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசுமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் ,கோயில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் , முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகளுக்கு தொடர்கதையாகி விட்டது .
எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் ஸ்டாலின் மாடல் விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to DMK Govt MK Stalin