சாதிவாரிக் கணக்கெடுப்பு: எங்களின் அழுத்தமே காரணம் - ராகுல்காந்தி பேட்டி! - Seithipunal
Seithipunal


சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் அணுகுமுறை, காங்கிரஸ் கட்சி முன்னிலைப்படுத்திய கோரிக்கையின் தாக்கம் என மக்களவைக் குழுத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாடாளுமன்றத்திலும் வெளியில் பலமுறை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கேற்ப, தற்போது பாஜக அரசு இதை ஏற்றுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால், இந்த கணக்கெடுப்பு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும். இது எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்ற தெளிவான காலக்கெடு தேவை.

90% மக்களுக்கு அதிகாரத்தை வழங்கும் மாற்றத்தை இது ஏற்படுத்தும். இதற்கான செயல் திட்டம் தெலங்கானாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த மாதிரி மத்திய அரசும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். தெலங்கானா, பிகார் ஆகியவை சாதிவாரிக் கணக்கெடுப்பில் முன்னோடிகளாக இருந்தாலும், அவற்றுக்கிடையே நடைமுறை வேறுபாடுகள் உள்ளன,” என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress Rahul Gandhi BJP Caste Census


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->