அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு! எடப்பாடி பழனிச்சாமி தலையில் இடியை இறக்கிய உயர்நீதிமன்ற உத்தரவு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடை உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனைவும், அன்றைய பொதுக்குழு தீர்மானங்களையும் எதிர்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை நிராகரிக்க எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், கடந்த ஜூலையில் உரிமையியல் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து, சூரியமூர்த்தியின் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை உத்தரவிட்டார். இதற்கு எதிராக, சூரியமூர்த்தி தரப்பு, கேவியட் மனு தாக்கல் செய்திருந்த போதிலும் தங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினர்.

நீதிமன்றத்தில் தொடர்ந்த விசாரணையின் போது, எடப்பாடி தரப்பில் சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினரல்ல, எனவே வழக்கு தொடர உரிமையில்லை என வாதிடப்பட்டது. அதேசமயம், சூரியமூர்த்தி தரப்பு நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்தியதாக வலியுறுத்தியது.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி பி.பி.பாலாஜி, முன்னர் விதித்திருந்த தடை உத்தரவை திரும்பப் பெற்றார். மேலும், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு மாற்றி ஒத்திவைத்தார்.

இந்தத் தீர்ப்பினால், எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பான சட்டப் போராட்டம் இன்னும் நீளவுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edppadi palanisami Case Chennai HC


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->