மதுரை முருகன் மாநாட்டுக்கு வாழ்த்து! கீழடிக்குப் காரணம் அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி பேட்டி!
ADMK Edappadi Palaniswami Keezhadi Excavation DMK
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதில், மதுரையில் பாஜக ஏற்பாடு செய்துள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். விரும்பும் தெய்வத்தை வழிபடுவது ஒவ்வொருவருக்கும் உள்ள ஜனநாயக உரிமை. இதை நாம் மதிக்கவேண்டும்.”
கீழடி அகழாய்வுக்கு துவக்கத்தை உருவாக்கியதும், அதனை முன்னெடுத்தும் அதிமுகதான். ஜெயலலிதா ஆட்சியில் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதற்குப் பிறகு நாங்களே தொடர்ந்து அக்காலத்தில் பல முயற்சிகள் எடுத்தோம். இதுகுறித்து நேற்றே விரிவாக விளக்கம் அளித்துள்ளோம்.
தி.மு.க. ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம் மக்கள் மனதில் இடம் பிடிக்காது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.
அமித்ஷா கூறிய ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும் என்ற கருத்து, அவருடைய தனிப்பட்ட பார்வை. ஆனால் அதன் பின்னணியில் தாய்மொழியின் பெருமையை வலியுறுத்தும் நோக்கம்தான் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
English Summary
ADMK Edappadi Palaniswami Keezhadi Excavation DMK