பயமே இல்லை... முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்... கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Edappadi palanisami condemn to DMK Govt TN Police
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ. வீட்டில் தஞ்சம் புகுந்த தாமரைச்செல்வன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன.
காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த நபருக்கே பாதுகாப்பு இல்லாமல் போனதை எப்படி விளக்குவார் இன்றைய பொம்மை முதல்வர்?
காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டும் அளவிற்கு குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது கிஞ்சற்றும் பயம் இல்லாமல் போனதற்கு காவல்துறைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
மேடைதோறும் என்னைப் பற்றி அவதூறு பேசுவதிலும், இல்லாத விஷயத்தை வைத்து அரசியல் செய்வதிலும் இருக்கும் முனைப்பு, ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் ஒருநாளாவது மக்களைக் காப்பதில், சட்டம் ஒழுங்கை சீர்செய்வதில் இருந்ததுண்டா இந்த பொம்மை முதலமைச்சருக்கு?
காவலர் குடியிருப்பில் புகுந்து கொலை செய்த குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென Failure மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தவெக அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் அவர்கள் இன்று திருச்சியில் தங்கி இருக்கும் போதே... அங்குள்ள பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பிலேயே ஒரு படுகொலை நடந்திருப்பது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் அவலத்தைக் காட்டுகிறது.
காவல்துறையை தன் துருப்பிடித்த இரும்புக் கையில் வைத்துக் கொண்டு, சட்டம் ஒழுங்கில் தொடர் தோல்வி கண்டு வரும் முதல்வர் அவர்களே, மேடைக்கு மேடை... ‘திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது’ என முழங்கி வருகிறீர்களே...!
தி.மு.க-வை வேறு யாரும் அழிக்கத் தேவையில்லை..! உங்களின் மோசமான சட்ட ஒழுங்கு நிர்வாகமே போதும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Edappadi palanisami condemn to DMK Govt TN Police