#BigNews || அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
Admk Case Judgement in Aug 17
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்னும் அரை மணி நேரத்தில் தீர்ப்பளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிமுக ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் எந்தவிதமான ஒப்புதலும் பெறாமல் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது என்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதே கோரிக்கையை முன்வைத்து பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, "உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்று கூறி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் இதனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு மீண்டும் கிருஷ்ணன் ராமசாமியின் விசாரணைக்கு வந்தபோது, வேறு ஒரு நீதிபதி இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.
இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் நடந்த விசாரணையின் முடிவில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இத்தகைய சூழலில், இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,, இருதரப்பு வாதங்களின் முடிவில் நீதிபதி ஜி.ஜெயசந்திரன் இந்த வழக்குக்கான தீர்ப்பை இன்று 11.30 மணிக்கு வழங்குவார் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Admk Case Judgement in Aug 17