சென்னை வெள்ள மீட்பு பணிகளுக்கு கூடுதல் அமைச்சர் நியமனம்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஏற்பட்டுள்ள மக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த கூடுதல் அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, அரும்பாக்கம் பகுதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், செம்மஞ்சேரி பகுதிக்கு அமைச்சர் மெய்யநாதன், ராயபுரம் பகுதிக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோரை நியமித்துள்ளார்.

ஏற்கனவே கேகே நகர் பகுதிக்கு அமைச்சர் ரகுபதி மற்றும் திருவெற்றியூர் பகுதிக்கு அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Additional minister appointed for chennai flood relief work


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->