ஒரே பள்ளியில் 52 மாணவ மாணவியர்களுக்கு திடீர் காய்ச்சல்.! பெரும் அதிர்ச்சியில் தமிழகம்.! - Seithipunal
Seithipunal


கொரோனா நோய்த்தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்ததை அடுத்து, தமிழகம் முழுவதும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

கல்லூரிகளும் கடந்த ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரச் சொல்ல கூடாது என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து, தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ -மாணவியர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தென்காசி மாவட்டம், மாறாந்தையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 பேருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது. 

நேற்று முன்தினம் அந்த பள்ளியில் பயின்ற 22 மாணவ மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், நேற்று மேலும் 30க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பள்ளியை சேர்ந்த 52 மாணவ மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

52 student fever


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->