குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து முக்கிய தலைவர்கள் 5 பேர் விலகல்.. காலியாகும் காங்கிரஸ் கட்சி.! - Seithipunal
Seithipunal


குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள் 5 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். 

காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

 மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்சினைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 ex ministers resign in Congress


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->