என் எம்எல்ஏ-க்களுக்கு தலா 5 கோடியா...? - ஒடிசா அரசியலில் குதிரை பேரம்... சிவகுமார் அதிரடிப் புகார்...!
5 Crores Each My MLAs Horse Trading Rocks Odisha Politics Shivakumar Levels Explosive Allegation
ஒடிசாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் பாஜக சார்பில் மூவரும், பிஜு ஜனதா தளம் சார்பில் இருவரும் என மொத்தம் 5 வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

ஒரு வேட்பாளர் வெற்றிபெற 30 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜக தனது பலத்தின் மூலம் 2 எம்பிக்களை எளிதாகத் தேர்வு செய்ய முடியும்; அதேபோல், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் பிஜு ஜனதா தளமும் 2 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இந்நிலையில், எம்எல்ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுக்கவும், ‘குதிரை பேரம்’ அச்சத்தாலும் காங்கிரஸின் 8 எம்எல்ஏ-க்கள் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்குத் தலா 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக 2 பேரை காவலர்கள் கைது செய்துள்ளதாகவும், ஆனால் தங்கள் கட்சி எம்எல்ஏ-க்கள் அந்தப் பேரத்தை நிராகரித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பணப் பரிமாற்ற விவகாரம் ஒடிசா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
5 Crores Each My MLAs Horse Trading Rocks Odisha Politics Shivakumar Levels Explosive Allegation