ஓய்ந்தது 4ம் கட்ட தேர்தல் பிரசாரம்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த 7ம் தேதியும் நடைபெற்றது. இந்த நிலையில், நான்காம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், 4ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருந்து வெளிநபர்கள் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த 4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. அதன்படி, ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டசபை தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசாரமும் தற்போது நிறைவடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4th stage election campaighn finish


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->