கோட்டையில் ஆதிக்கம் செலுத்துமா பாஜக? 3ம்‌ கட்ட‌ வாக்குப்பதிவு தொடங்கியது.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு சற்று முன்னர் தொடங்கியது. இன்று காலை சரியாக ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 

குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீகார், அசாம், மேற்குவங்கம் கோவா ஆகிய 10 மாநிலங்களில் 93 தொகுதிகளில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. 

இன்று நடைபெற இருந்த குஜராத்தின் சூரத் தொகுதிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளரை தவிர வேறு யாரும் போட்டியிடாததால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதேபோன்று காஷ்மீரில் அனந்தநாக்-ரஜோரியில் தேர்தல் நடைபெறவில்லை.

இன்று நடைபெறும் தேர்தலில் அமித்ஷா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களோடு 1352 பேர் களத்தில் உள்ளனர்‌ என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் மூன்றாம் கட்ட தேர்தலில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுவதால் தனது கோட்டையில் பாஜகவின் ஆதிக்கம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறிள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3rd phase loksabha election polling started


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->