மூன்று லட்சம் ட்வீட்., சந்தி சிரிக்கும் சூர்யாவின் பொய்பீம் திருட்டுத்தனம்.! மண்டியிட்ட இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கிருஸ்துவ முதலியார் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதே பெரும் அநீதி.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் வந்தது தான் இந்த பிரச்னை.

வன்னியர் சமுதாய மக்களின் கேளிவிகள் :

இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? 

கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? 

அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? 

இன்று எதற்கும் துணிந்தவர்கள், அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், இன்று காலை முதல் சமூகவலைத்தளமான டிவிட்டரில் நடிகர் சூர்யாவுக்கும், அமேசான் நிறுவனத்துக்கும் பாடம் புகட்டும் வகையில் வன்னியர் மக்கள். #SuriyaHatesVanniyars #AmazonStopHate என்ற ஹேஷ் டேக் மூலம் வெளுத்து வாங்கி கொண்டு இருக்கின்றனர்.

இந்த இரு ஹேஷ் டேக்.,களும் தற்போது வரை மூன்று லட்சத்துக்கு மேல் ட்வீட் செய்யப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகன் சூர்யா, இயக்குனர் ஞானவேல் செய்த அனைத்து திருட்டுத்தனங்களும் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது. 

தமிழ்குடிக்குள் முன்புபோல் கலகம் மூட்டி குளிர்காய முடியாது என்பதை அனைத்து தமிழ்க்குடிகளும் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜெய்பீம் உண்மை கதை., பின்னர் அது புனைவு என்று பின்வாங்கிய போதே நடிகன் சூர்யாவின் பொய்கள் வெளிக்கொண்டு வரப்பட்டது. இனியும் மன்னிப்பு கிட்டவில்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ்குடியும் ஒன்று சேர்ந்து வெளுத்து வாங்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 LAKS TWIT Suriya hates vanniyars


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->