Freedom Fighter : தமிழ் மண்ணை காத்த சகோதரர்கள்.... யார் இவர்கள்? - Seithipunal
Seithipunal


மருது சகோதரரர்கள்:

இவர்கள் தமிழ் மண்ணை காத்த வீர சகோதரர்கள். சிவகங்கை சீமையில் நல்லாட்சி செய்த இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!!

பிறப்பு :

விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் மொக்க பழநியப்பன் என்பவருக்கும், ஆனந்தாயி என்னும் பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ஆம் ஆண்டு மகனாக பிறந்தவர் பெரிய மருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழித்து 1753ஆம் ஆண்டு சிறிய மருது பாண்டியர் பிறந்தார்.

விடுதலை போராட்டத்தில் மருது சகோதரர்களின் பங்கு : 

அரசர் விஜயரகுநாத சேதுபதியிடம் முத்துவடுகநாதன் தங்கள் சீமைக்கு வீரர் தேவை என்றார். அரசர் விஜயரகுநாத சேதுபதி மருது பாண்டிய சகோதரரை சீமைக்கு அழைத்து செல்லுங்கள் என்றார். அதன்படி முத்துவடுகநாதரும், வேலுநாச்சியாரும் மருது பாண்டிய சகோதரர்களை சீமைக்கு அழைத்து சென்றனர்.

முத்துவடுகநாதரின் அமைச்சர் மற்றும் தளபதி ஆகியோரின் வயது முதிர்வு காரணமாக அவர்களிடம் பயிற்சி பெற்ற பெரிய மருதுவை தளபதியாகவும், மதிநுட்பம் நிறைந்த சின்ன மருதுவை அமைச்சராகவும் அரசர் நியமித்தார்.

அதன்பிறகு முத்துவடுகநாதர், ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்ட மறுத்ததால், ஆங்கிலேயப் படையின் உதவியோடு 1772ஆம் ஆண்டு காளையார் கோவிலில் இருந்த மன்னர் முத்துவடுகநாதரை திடீரென்று தாக்கிக் கொன்று, காளையார்கோட்டையை தங்கள் வசப்படுத்தினர். இவர்களிடமிருந்து தப்பித்த வேலுநாச்சியார் சின்ன மருது, பெரிய மருது துணையோடு போர் புரிவதற்கு ஹைதர் அலியின் உதவியை நாடினார்.

ஹைதர் அலி போர் புரிவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சி கோட்டை, அய்யம்பாளையம் என இடம் மாறி மாறி முகாமிட்டு ஆங்கிலேயரை அடித்து விரட்ட தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறுதியாக சிவகங்கை நகரை கைப்பற்ற சின்ன மருது, பெரிய மருது தலைமையில் படை திரட்டி போர் நடந்தது. தன் படைகளை மூன்றாகப் பிரித்து, மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றி வாகை சூடினார்.

சரியாக 8 ஆண்டுகள் கழித்து, தனது கணவர் முத்துவடுகநாதருக்கும், தனக்கும் போர்க்காலங்களிலும், நிர்வாகத்திலும் உறுதுணையாக நின்ற மருது சகோதரர்களிடம் சிவகங்கையை ஒப்படைக்க முன்வந்தார் வேலுநாச்சியார். மருது சகோதரரர்கள் 1780ஆம் ஆண்டு முதல் 1801ஆம் ஆண்டு வரை சிவகங்கை சீமையில் நல்லாட்சி புரிந்தார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் கொடுத்தார். அதற்காகவே 1801ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள், சிவகங்கை மீது போர் தொடுத்தனர். இப்போர் 150 நாட்கள் இடைவிடாமல் நடந்தது. சிவகங்கை அரண்மனையை ஆங்கிலேயப்படையினர் கைப்பற்றினர்.

சிவகங்கை அரண்மனையில் இருந்து தப்பி, தலைமறைவானார்கள் மருது பாண்டியர்கள். காளையார் கோவில் கோபுரங்களுக்கு எதிரில் பீரங்கிகளை நிறுத்திய ஆங்கிலேயப்படை, மருது பாண்டியர்கள் சரணடையாவிட்டால் கோபுரங்களை தகர்க்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். தாங்கள் கட்டிய கோவில் தகர்க்கப்படுவதை விரும்பாத மருது பாண்டியர்கள் ஆங்கிலேயப்படையிடம் சரணடைந்தனர்.

மருது சகோதரர்களின் மறைவு :

1801ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிட்டது ஆங்கிலேய அரசு. இவர்களின் குடும்பத்தை சேர்ந்தோரும், மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Matuthu sagodhararkal history in Tamil 22


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->