மார்பக புற்றுநோய் காரணம் மற்றும் தீர்வு.!!
what are the caution and solution of breast cancer
மார்பக புற்றுநோய் என்பது தாய் மற்றும் பாட்டி போன்றவர்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஒன்றாகும். இந்த மார்பாக புற்றுநோய் பிரச்சனை 50 வயதிற்கு முன்னதாக பெண்ணிற்கு ஏற்படும் பட்சத்தில்., அது அவர்களின் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
மார்பக புற்றுநோய் இப்போதுள்ள பெண்களுக்கு அதிகளவு ஏற்படும் பிரச்சனையாக இருக்கிறது. சிலவகையான பழக்கவழக்கத்தை மூலமாக மார்பக புற்றுநோயானது அதிகரித்து வருகிறது.
மேலும்., உணவுக்கட்டுப்பாடில்லாதது., உடலின் எடை அதிகரித்தல்., புகைப்பழக்கம் மற்றும் போதை பொருட்கள் உபயோகம் செய்தல் போன்ற பழக்கமானது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும்.

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது மார்பக புற்றுநோய் பிரச்சனையை பாதியாக குறைக்கிறது. மேலும்., உடலுக்கு தகுந்த எடையானது இல்லாத பட்சத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படலாம்.
18 வயதில் இருந்து சரியான எடை இல்லாத பிரச்சனை., மாதவிடாய் இறுதி சுழற்சி சமயம் போன்ற காலங்களில் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. மேலும்., அளவுக்கு அதிகமான எடையின் காரணமாக ஈஸ்டிரோஜன் அளவு அதிகரித்து புற்றுநோய் ஏற்படும்.
மேலும்., பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் புற்றுநோய் செல்களை அளித்து உடலை பாதுகாக்கிறது. காய்கறிகளில் கேரட்., தக்காளி., தர்பூசணி மற்றும் கீரைகள் அதிகளவு சாப்பிட வேண்டும். சோயா பொருட்கள் மூலமாகவும் பல பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
what are the caution and solution of breast cancer