தாய்மார்கள் பாகற்காய் சாப்பிட்டால் என்ன நடக்கும்..?!  - Seithipunal
Seithipunal


பாகற்காயின் மருத்துவப் பயன்கள்:

பாகற்காய் பசியை நன்றாகத் தூண்டக்கூடியது.

உணவில் பாகற்காயைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும்.

பாகற்காயை பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.

சர்க்கரை வியாதிக்கு முற்றிய பாகற்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு ஆகிய நோய்களானது நீங்கும்.

பாகற்காய் விதையின் எண்ணெயை உடலில் ஏற்படும் காயங்களுக்குப் போட காயங்கள் விரைவில் ஆறும்.

பாகற்காய் சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். 

Image result for தாய்மார்கள் பாகற்காய்

2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்து வர மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

பாகற்காய் இலைச்சாற்றுடன் சிறிது வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் நாக்குப் பூச்சிகள் வெளியேறிவிடும்.

பாகற்காயை உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் ஆகிய கொடிய நோய்கள் நீங்கும்.

பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவுப்பையிலுள்ள பூச்சிகள் அழியும்.

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் பாகற்காய் சூப்புடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

பாகற்காயின் இலைச்சாற்றுடன் சமபாகம் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thaimarkal pagarkayai sapidalama


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->