கண்களை சுற்றி கருவளையம்..? இதற்கு என்னதான் தீர்வு..? சிம்பிள் வைத்தியம்..! - Seithipunal
Seithipunal


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால், இந்த காலகட்டத்தில் முகம் அழகாக இருந்தால் தான் அகமும் அழகாக இருப்பதாக சிலர் உணருகின்றனர். இந்த நவீன உலகில் அழகு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஆணோ, பெண்ணோ ஒருவருடைய முகத்தின் ஒட்டு மொத்த அழகும் கண்களில்தான் இருக்கிறது.  பெரும்பாலோர் அதனை கண்டு கொள்வதே இல்லை. சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகியுள்ள கருவளையம் அவர்களது அழகையே கெடுத்து விடுவதோடு, எப்போதும் தூக்கம் கலக்கத்தில் இருப்பது போன்றும், வயதான தோற்றம் வந்து விட்டதே என்று எண்ணி கவலை படுகின்றனர்.

கருவளையத்திற்கு காரணம் என்ன..?

தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப், மொபைல் போன்றவற்றை பயன்படுத்துவது முதன்மை காரணியை இருக்கிறது. மரபணு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான பல்வேறு காரணிகளாலும் கண் கருவளையம் ஏற்படுகிறது. இவற்றை நாம் எப்படி வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டு எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்களை சுற்றியுள்ள முதலில் நன்றாக இரவில் கண் விழிக்காமல் தூங்க வேண்டும். அதிக நேரம், டிவி, மொபைல் பார்ப்பதை தவிக்க வேண்டும்,  அடுத்ததாக, தக்காளி சாறு, எலுமிச்சை சாறு, இயற்கையான கற்றாழை ஜெல், உருளைக்கிழங்கு, காபித் தூள், வெள்ளரிக்காய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தலாம். 

பயன்படுத்தும் வழிமுறைகள்..

சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி 05-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

பாதாம் எண்ணெயை கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

க்ரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து ஆறிய பின், கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

ரோஸ் வாட்டரை காட்டன் துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர கருவளையம் நீங்கும்.

கருவளையங்களுக்கு மருத்துவர்கள் கூறும் கரணம் என்ன?

சோர்வு மற்றும் தூக்கமின்மை:
போதுமான தூக்கம் இல்லாவிட்டால், கண்களைச் சுற்றியுள்ள சருமம் மெலிந்து, இரத்த நாளங்கள் தெளிவாகத் தெரியும், இதனால் கருவளையம் ஏற்படும், 

ஒவ்வாமை:
ஒவ்வாமை எதிர்வினைகள் கண்களைச் சுற்றி வீக்கத்தையும், கருவளையங்களையும் ஏற்படுத்தலாம், 

தைராய்டு பிரச்சனைகள்:
தைராய்டு சுரப்பியின் குறைபாடு கருவளையங்களை ஏற்படுத்தலாம்.

வயது அதிகரிப்பு:
வயதாக ஆக சருமம் மெலிந்து, கொலாஜன் இழப்பு ஏற்படும், இதனால் கருவளையம் அதிகரிக்கும்.

சன்ஸ்கிரீன் மற்றும் சன்கிளாஸ் அணியாமல் இருப்பது:
சூரியனின் புற ஊதா கதிர்கள் கருவளையங்களை அதிகரிக்கும். 

சரும மருத்துவரின் பரிந்துரை:

ரெட்டினாய்டு கிரீம்கள், ஹைட்ரோகுவினோன் கிரீம்கள் அல்லது லேசர் சிகிச்சைகள் கருவளையங்களை குறைக்க உதவும்.

மருத்துவ நடைமுறைகள்:

மைக்ரோடெர்மபிரேஷன், கெமிக்கல் பீல்ஸ் மற்றும் ஊசி நிரப்பிகள் போன்ற சிகிச்சைகள் கருவளையங்களை குறைக்க உதவும்.

சரும மருத்துவர் அல்லது தோல் பராமரிப்பு நிபுணரின் ஆலோசனை:

உங்கள் கண்களின் கருவளையம் உங்களைத் தொந்தரவு செய்தால், ஒரு தோல் மருத்துவர் அல்லது தோல் பராமரிப்பு நிபுணரை அணுகி, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சையைப் பெறலாம்.

அவர்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை நிரந்தரமாக அகற்ற, லேசர் சிகிச்சைகள் அல்லது PRP ஊசி போன்ற சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம். 

நன்றி: இணைய இணையம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Simple ways to get rid of dark circles around the eyes


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->