நாக்கை அடிமையாக்கும் சுவை.. காளான் பன்னீர் வடை.! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள்:

காளான் - அரை கப்

பன்னீர் - அரை கப்

கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு

சோம்பு - ஒரு டீஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

கடலை மாவு - 5 ஸ்பூன்

அரிசி மாவு - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். பன்னீரை துருவிக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய காளான், துருவிய பன்னீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சோம்பு, மிளகாய் தூள், கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து வடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து வடை போல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

சூப்பரான காளான் பன்னீர் வடை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prepare mashroom panneer vada


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->