Just இந்த steps போதும்... முடி உதிர்வது அப்படியே நின்றுவிடும்...! - Seithipunal
Seithipunal


முடி உதிர்வை தடுக்க:
தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்வதை தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.
வெயிலில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.


கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவைக் கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
கனிந்த வாழைப்பழம் ஒன்றை மிக்ஸியில் அரைக்க, அடர்த்தி குறைந்து நீர்த்துவிடும். அதனுடன் இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில், ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து எடுத்த சாறு, 2 டீஸ்பூன் வெந்தய பவுடர், இரண்டு டீஸ்பூன் புங்கங்காய் பவுடர் கலந்து தலையில் ‘பேக்’ போடவும்.

பத்து நிமிடங்களுக்குப் பின் நன்றாக அலசவும். ஓரிரு வாரத்தில் முடி உதிர்வது தடைபடுவதுடன், நுனி பிளவும் நீங்கி கூந்தல் பளபளவென மின்னும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.
மருதாணி இலை கைக்கு மட்டும் நல்ல நிறத்தைக் கொடுக்க பயன்படுவதில்லை.
இது முடிக்கு நல்ல சத்துக்களைக் கொடுக்கவும் வல்லது.
அதிலும் இதனை கடுகு எண்ணெயில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த எண்ணெயை குளிர வைத்து, தினமும் தலைக்கு தடவி வந்தால், முடி உதிர்வது உடனே நின்றுவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Just these steps are enough hair loss will stop


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->